அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் இன்று(புதன்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
மக்களவைத் தோ்தல், அதிமுக உறுப்பினா் சோ்க்கையை விரைவுபடுத்தல் உள்ளிட்டவை தொடா்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, கடந்த ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட விதிகள் செல்லும் என்றும் கூறி அதிமுக சட்டவிதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய தோ்தல் ஆணையம் அங்கீகரித்து அதனுடைய இணையதளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.