நடராஜர் கோயிலில் செங்கோல் வழிபாடு!

புதுதில்லியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திரமோடியால் செங்கோல் வைக்கப்பட்டதை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் செங்கோல் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களால்  செங்கோலுக்கு செய்யப்பட்ட சிறப்பு வழிபாடு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களால் செங்கோலுக்கு செய்யப்பட்ட சிறப்பு வழிபாடு
Published on
Updated on
1 min read

புதுதில்லியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திரமோடியால் செங்கோல் வைக்கப்பட்டதை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் செங்கோல் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுதில்லியில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திருவாவடுதுறை ஆதினத்தால், பண்டித நேருக்கு அளிக்கப்பெற்ற செங்கோல் தற்போது பிரதமர் நரேந்திரமோடியால் நிறுவப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ள தொன்று தொட்டு உள்ள செங்கோலுக்கு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், உ.வெங்கடேச தீட்சிதர், சம்பந்த தீட்சிதர், ராஜா தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்று இந்தியாவில் தர்மத்தின் ஆட்சியான செங்கோல் ஆட்சி நிலைக்கட்டும் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கோளறு பதிகம் பாடி செங்கோலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com