

தமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், கரோனா தொற்று பாதிப்புக் காரணமாக கோவயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசனுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை: அமைச்சர் சேகர்பாபு
இந்நிலையில் வானதி சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.