அதிமுக பொதுக்கூட்டம் நவ. 16 -க்கு ஒத்திவைப்பு

தஞ்சாவூரில் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் வருகிற நவம்பர் 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தஞ்சாவூரில் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் வருகிற நவம்பர் 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

அதிமுகவின் 52 ஆவது தொடக்கவிழாவையொட்டி வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அதில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருவதாலும் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் வருகிற நவம்பர் 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அன்றைய தினம் மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com