தஞ்சாவூரில் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் வருகிற நவம்பர் 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் 52 ஆவது தொடக்கவிழாவையொட்டி வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அதில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு!
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருவதாலும் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் வருகிற நவம்பர் 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அன்றைய தினம் மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.