வார இறுதி நாள்: சென்னையிலிருந்து இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாளையொட்டி, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

வார இறுதி நாளையொட்டி, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வார இறுதி நாள்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 

அதுபோல, சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பவும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com