அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறாா்.
இது தொடா்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளராக தோ்தல் ஆணையமும் உயா்நீதிமன்றமும் என்னை அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளா் என ஓ.பன்னீா்செல்வம் கூறிவருகிறாா். இது தொண்டா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, அதிமுகவின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சிக் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீா்செல்வமும் அவரது ஆதரவாளா்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவா்கள் அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், இன்று(செவ்வாய்க்கிழமை) நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரியது.
எத்தனை முறை இப்படி வழக்குத் தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் விசாரணை முடிவில், அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம், லெட்டர் பேடு உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.