மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 6,498 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,702 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,498 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 20.79 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க | இன்றும், நாளையும் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு