கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.10) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


திருவாரூர்: கனமழை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.10) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, திருவாரூர் மன்னார்குடி நன்னிலம் மாங்குடி கொரடாச்சேரி கூத்தாநல்லூர் குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.10) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ உத்தவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com