தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

'கடவுள் கைவிட்டதால்' கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் சிக்கினார்!

நம்பிய கடவுள் தன்னை கைவிட்டதால் மது போதையில் கோயிலின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடித்த கொத்தவன் சாவடி போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

News image
Updated On :10 நவம்பர் 2023, 8:02 am

DIN

சென்னை: நம்பிய கடவுள் தன்னை கைவிட்டதால் மது போதையில் கோயிலின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடித்த கொத்தவன் சாவடி போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் அமைந்துள்ள வீரபத்திர சுவாமி திருக்கோயில் வெள்ளிக்கிழமை காலை அதே பகுதியை சேர்ந்த 38 வயதான முரளிகிருஷ்ணன் என்பவர் போதையில் பெட்ரோல் குண்டினை வீசியுள்ளார்.

கோயிலின் உள்ளே இருந்த பூசாரி வெளியே ஓடி வந்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். 

தகவல் அறித்து கொத்தவால்சாவடியில் இருந்து விரைந்து வந்த போலீசார் முரளிகிருஷ்ணணை கைது  செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கோயிலில் வழிபட்டு வருவதாகவும், இந்த கடவுள் தனக்கு திருப்பி ஏதும் செய்யவில்லை எனக் கூறி மது போதையில் கோயிலின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.