இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கம்பம் மெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டு போக்குவரத்து பாதிப்பு

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டு விழுந்தால் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:20 am

DIN

கம்பம்: தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டு விழுந்தால் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கம்பத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளா செல்லும் மலைச் சாலையான கம்பம் மெட்டு மலைச்சாலை 5-வது கொண்டை ஊசி வளைவில் பாறை உருண்டு சாலையில் விழுந்து பள்ளம் ஏற்பட்டது. 

இதனால் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியவில்லை. மாநில நெடுஞ்சாலைத்துறையினர் பாறையை அகற்றி, பாறை சரிவு ஏற்படாமல் மணல் மூடைகளை அடுக்கி சரிசெய்யப்பட்டு, அதன்பிறகு போக்குவரத்து தொடங்கியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.