சென்னை அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்நர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலை நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, சாலையோரம் நின்றிருந்தவர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர் என 6 பேர் மீது மோதியது. இதில் காயமடைந்த 6 பேரில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். காரில் இருந்த 3 பேரில் 2 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதையும் படிக்க | சத்தியமங்கலம் அருகே புளியமரத்தில் கார் மோதி 4 பேர் பலி
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிடிபட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து புலனாய்வு போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் தெரியவந்துள்ளது.