சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: 2 பேர் கவலைக்கிடம்

சென்னை அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்நர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா நகரில் சாலை தடுப்புச் சுவரில் மோதி உருகுலைந்த கார்
சென்னை அண்ணா நகரில் சாலை தடுப்புச் சுவரில் மோதி உருகுலைந்த கார்

சென்னை அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்நர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலை நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, சாலையோரம் நின்றிருந்தவர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர் என 6 பேர் மீது மோதியது. இதில் காயமடைந்த 6 பேரில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். காரில் இருந்த 3 பேரில் 2 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிடிபட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போக்குவரத்து புலனாய்வு போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com