நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.18 அடி!

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த 38 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.18 அடியாக உயர்ந்துள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2023, 9:20 am IST

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த 38 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.18 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

நீர்வரத்து சரிந்த நிலையில் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வந்தது.

கடந்த மாதம் 10 -ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்த காரணத்தால் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 500கன அடியாகவும், பின்னர் வினாடிக்கு 250 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.

நீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்தது. 

நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் நீர் வரத்து சற்று அதிகரித்த காரணத்தாலும் கடந்த மாதம் 10 ஃஆம் தேதி 30.90 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 61.08 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 38 நாட்களில் அணையின் நீர்மட்டம் 30.18 அடி உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3,332 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 25.49 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.