மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த 38 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.18 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
நீர்வரத்து சரிந்த நிலையில் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வந்தது.
கடந்த மாதம் 10 -ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்த காரணத்தால் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 500கன அடியாகவும், பின்னர் வினாடிக்கு 250 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.
இதையும் படிக்க | வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘மிதிலி’ புயல்!
நீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்தது.
நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் நீர் வரத்து சற்று அதிகரித்த காரணத்தாலும் கடந்த மாதம் 10 ஃஆம் தேதி 30.90 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 61.08 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 38 நாட்களில் அணையின் நீர்மட்டம் 30.18 அடி உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3,332 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 25.49 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை மறியலுக்கு இடையே சென்ற வாகன ஓட்டியை தாக்கிய திமுகவினர்! அமைச்சர் ராஜ்மோகன் பகிர்ந்த காணொலி

சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கேள்வி

கபினியிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் அடிப்பாலாறு வந்தடைந்தது!

பிகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



