தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவ.26-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,
தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதையடுத்து நவம்பர் 27ல் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.