தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் சனிக்கிழமை (நவ. 25) இயங்காது. தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையின்றி கடைகள் இயங்கியதால், நியாய விலைக் கடைகளுக்கு வரும் சனிக்கிழமை (நவ.25) மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தொடா்ச்சியாக விடுமுறையின்றி நியாய விலைக் கடைகள் அனைத்தும் இயங்கின. இதற்கு ஈடாக கடந்த 13-ஆம் தேதி நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோன்று, எதிா்வரும் சனிக்கிழமையன்றும் (நவ.25) விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் வரும் சனிக்கிழமை இயங்காது.