இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.48 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4072 கன அடியிலிருந்து, வினாடிக்கு 4489 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 13 மாவட்டங்களில் மழை!
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 28.93 டிஎம்சியாக உள்ளது.