அரசுப்பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகள் அவசியம்: போக்குவரத்துத்துறை 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அரசுப் பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகள் அவசியம் என்று அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் தமிழ்நாடு போக்குரவத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அரசுப் பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகள் அவசியம் என்று அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் தமிழ்நாடு போக்குரவத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. 
அதில், மேலும் தெரித்திருப்பதாவது, அரசு பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். அரப் பேருந்துகளின் உறுதித்தன்மையை உறுதி செய்ய வேண்டும். 
பேருந்து மேற்கூரை, படிக்கட்டுகளை கண்காணித்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பேருந்துகளில் பிரேக், கிளட்ச் உள்ளிட்ட போக்குவரத்து அம்சங்களை பராமரிக்க வேண்டும். 
பணிமனைகளில் அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு குறித்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சில வாரங்களாக அரசுப் பேருந்துகளில் மழைநீர் கசிவது குறித்த விடியோ வெளியான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com