புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: அதிமுக வெளியேற்றம்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். 

News image
Updated On :11 அக்டோபர் 2023, 1:33 pm IST


சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

இந்த நிலையில், பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அமர்ந்துள்ள எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை, ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்கக்கோரி பத்து முறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 3 உறுப்பினர்களை நீக்கக்கோரிய கடிதம் மீதும் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என எப்பாடி பழனிசாமி பேசினார். 

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன்படி தான் நடக்கிறேன். இந்த விவகாரத்தில் சட்டப்படியே நடக்கிறேன். வீம்புக்காக எதையும் செய்யவில்லை. ஒருவர் எந்த சின்னத்தில் வென்று பேரவைக்கு வருகிறாரோ அதே சின்னத்தில்தான் கடைசி வரை பார்ப்பேன் என விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம் என இபிஎஸ் தொடர்ந்து பேசி வந்தார். அப்போது, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேச முற்பட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்னாவில் ஈடுபட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு அப்பாவு உத்தரவிட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.