சிதம்பரம் அருகே பள்ளி பேருந்தில் தீ: மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
சிதம்பரம் அருகே பிரபல தனியார் பள்ளி மினி பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. பேருந்தில் பயணம் செய்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.








