கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பர்கூர் அருகே லாரிகள் மோதல்: இருவர் சாவு

கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் உயிரிழந்தனர்.

News image
பர்கூர் அருகே லாரிகள் மோதல்
Updated On :21 செப்டம்பர் 2023, 3:18 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து நெகிழிப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை அதிகாலை சென்றுபோது, இந்த லாரியின் பின்பகுதியில்  ஆந்திர மாநிலத்திலிருந்து கோவைக்கு ஈச்ச மர கீற்றுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி,  வேகமாக மோதியது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள்,  நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று இடுப்பாடுகளில் சிக்கியவர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டனர்.

இதில்,  ஈச்ச மர கீற்றுகளை பாரம் ஏற்றி சென்ற லாரியின் ஓட்டுநர் காட்பாடியை சேர்ந்த சரவணன், அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரின் உதவியாளர் விசுவநாதன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தால் வாணியம்பாடி  கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.