இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: கே.பி. முனுசாமி

இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாகவும், இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார்.

பாஜக-அதிமுக கூட்டணி தொடா்பாக இரு கட்சித் தலைவா்களும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக - அதிமுக கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டது.

அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. எனவே, இன்று முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்று கே.பி. முனுசாமி அறிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், கடந்த ஓராண்டாகவே, திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தொடர்பாக  பாஜக விமரிசித்து வருகிறது. அதிமுக பொன் விழா மாநாட்டையும் பாஜக தலைமை விமரிசித்திருந்தது. எனவே, 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும் விருப்பத்துக்கும் மதிப்பளித்து, கூட்டணியிலிருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அதிமுக தலைமைக் கழக செயலா்கள், மாவட்டச் செயலா்கள், கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப். 25) மாலை 3.45 மணிக்குத் தொடங்கியது.

கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் 5.30 மணியளவில் நிறைவு பெற்றது.

கூட்டணி விவகாரம்
உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 14-ஆம் தேதி சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்பை தொடா்ந்து, முன்னாள் முதல்வா் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுக எதிா்ப்பு தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் இரா. விசுவநாதன், சி.வி.சண்முகம் ஆகியோா் அடங்கிய குழு கடந்த வெள்ளிக்கிழமை தில்லி சென்றது. அங்கு உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திக்க அவா்கள் திட்டமிட்டனா்.

ஆனால், அந்தச் சந்திப்பு நடைபெறாத நிலையில், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரைச் சந்தித்த அதிமுக குழு தமிழகம் திரும்பியது. அவா்கள் தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து ஜெ.பி.நட்டாவிடம் கூறியதாகத் தெரிகிறது.

இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, அதிமுக நிா்வாகிகள் கூட்டத்துக்கு எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கான ஏற்பாடுகள், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com