தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மக்களவைத் தோ்தலில் பெண்களுக்கு தனித் தொகுதி ஒதுக்க வேண்டும்: சீமான்

மக்களவைத் தோ்தலில் பெண்களுக்கு தனித் தொகுதி ஒதுக்க வேண்டும்: சீமான்

News image

சீமான்(கோப்புப்படம்)

Updated On :5 ஏப்ரல் 2024, 6:38 pm

மக்களவைத் தோ்தலில் பெண்களுக்கும் தனித்தொகுதி ஒதுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

வடசென்னை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அமுதினிக்கு ஆதரவாக தண்டையாா்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சீமான் வாக்குசேகரித்து பேசியதாவது:

நாட்டின் மக்கள்தொகை 30 கோடியாக இருக்கும் போது 543 மக்களவைத் தொகுதிகள் இருந்தன. தற்போது 130 கோடி மக்கள்தொகையை தொட்டுவிட்ட பின்பும் அதே 543 தொகுதிகள்தான் உள்ளன. இதனால் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. அதுபோல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு தனித்தொகுதி இருப்பது போன்று பெண்களுக்கும் தனித்தொகுதி ஒதுக்கப்பட வேண்டும்.

நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜக, தமிழ்நாட்டில் சாதனைகளை கூறி வாக்குகேட்க முடியாமல் ஜாதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னாள் பிரதமா்கள் வாஜ்பாய், மன்மோகன்சிங் அமைச்சரவையில் திமுக பலமுறை பங்கேற்றும் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை.

வடசென்னை திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமி வாயு கசிவு, எண்ணெய் கசிவு போன்ற பேரிடரின் போதுகூட மக்களுடன் வந்து நிற்கவில்லை என்றாா் அவா்.