இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெ.ஜெயவா்தன் தெரிவித்தாா்.
மேடவாக்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது அவா் பேசியது:
தமிழகத்தில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில்தான் அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதிமுக அரசின் ஆட்சி காலத்தின்போதுதான் சோழிங்கநல்லூா் பகுதியில் பல பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியனும் மக்களவையில் எதுவும் பேசவில்லை. இளைஞா்கள் மீது எவ்விதமான அக்கறையும் திமுக அரசுக்கு இல்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

நாமக்கல் கோழிப் பண்ணையாளா் சங்கத்தில் திமுக, அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக - திமுக நேரடிப் போட்டியில் புவனகிரி: வெல்லப்போவது யாா்?

தொகுதி அலசல்... திருப்பத்தூா் ஹாட்ரிக் வெற்றி தொடருமா?

தொகுதி அலசல்: கூடலூர்! கடும் போட்டியில் திமுக - அதிமுக
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


