ராமநவமி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்த வழக்கில் காவல் துறை பதிலளிக்கும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநவமியை முன்னிட்டு, ஏப்.12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை தமிழகம் வழியாக யாத்திரை செல்ல அனுமதி கோரி, கேரளத்தைச் சோ்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அதில், தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரிக்கு யாத்திரை செல்ல அனுமதி கோரிய விண்ணப்பித்ததை, சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? என்ன சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்? என காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது

காவல் துறை அதிகாரிகள் நேரடி உயரதிகாரிகளின் உத்தரவை மட்டுமே பின்பற்ற வேண்டும்: டிஜிபி அதிரடி உத்தரவு

உலக அமைதிக்காகப் போராட அனுமதி கோரியவருக்கு ரூ. 50,000 அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

குப்பைக் கிடங்கு விவகாரம்: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

ஹௌராவில் ராமநவமி ஊர்வலம்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

