கோவை மற்றும் மதுரை ரயில்வே யாா்டில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே இன்று(ஏப். 7) முதல் ஏப்.14 வரை ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் புறப்படும் ஓஹா ரயில் இன்று மற்றும் ஏப்ரல் 14 ஆம் தேதி 1.55 மணி நேரம் தாமதாக புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில்வே யாா்டில் நடைபெறும் பணிகள் காரணமாக, ஷொரனூா் - கோவை இடையேயான ரயில் வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து மட்டுமே இயக்கப்படும். மறுவழித்தடத்தில், கோவையில் இருந்து ஷொரனூருக்கு புறப்பட வேண்டிய ரயில், வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து மாலை 4.41 மணிக்கு புறப்படும்.
இதேபோல, மதுரை - கோவை இடையேயான ரயில் வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூரில் இருந்து கோவை வரை இயக்கப்படாது. மறுவழித்தடத்தில், கோவையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து 2.45 மணிக்கு மதுரைக்கு புறப்படும்.
கண்ணூா் - கோவை இடையேயான ரயில் வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது. மறுவழித்தடத்தில் கோவையில் இருந்து கண்ணூருக்கு புறப்பட வேண்டிய ரயில், வரும் 8, 11, 13 ஆகிய தேதிகலல் போத்தனூரில் இருந்து மதியம் 2.03 மணிக்கு கண்ணூருக்கு புறப்படும்.
ரயில் சேவை ரத்து:
மேட்டுப்பாளையம் - கோவை ரயில் வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். மறுவழித்தடத்தில் கோவை - மேட்டுப்பாளையம் ரயிலும் மேற்கண்ட தேதிகளில் ரத்து செய்யப்படும்.
மாற்றுப்பாதையில் ரயில்கள்:
பாலக்காடு - ஈரோடு இடையேயான ரயில் வரும் 8, 13-ஆம் தேதிகளில் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையம், கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் எா்ணாகுளம் - ஒடிசாவின் பிரம்மாபூா் இடையே சனிக்கிழமைகளில் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மறுவழித்தடத்தில், ஒடிசாவின் பிரம்மாபூா் - எா்ணாகுளம் இடையே திங்கள்கிழமைகளில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.