ஏப். 12-ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!
தேர்தல் பிரசாரத்திற்காக அமைச்சர் அமித் ஷா ஏப். 12-ல் தமிழகம் வருகிறார்.


மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக உள்துறை துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஏப். 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார்.
அமைச்சர் அமித் ஷா ஏப். 12 ஆம் தேதி சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, ராஜராஜேஸ்வரி கோயில், பைரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளார்.
கன்னியாகுமரியில் ஏப். 13 ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபடும் அமித் ஷா, அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து, தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியிலும் அமித் ஷா பங்கேற்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமைச்சர் அமித் ஷா ஏப். 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிவித்திருந்த நிலையில், அவரின் வருகை சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...