மோடியின் பேரணியில் விதிமீறல்: சென்னை போலீஸ் வழக்குப் பதிவு!

மோடியின் பேரணியில் விதிமீறல்: சென்னை போலீஸ் வழக்குப் பதிவு!

மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு.
Published on

சென்னை: சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற சாலை பேரணியில் விதிமீறல் நடந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வந்த பிரதமர் மோடி, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பனகல் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணியில் கலந்து கொண்டார்.

இந்தப் பேரணிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறையினர் அனுமதி அளித்திருந்த நிலையில், விதிகளை மீறி சாலைகளில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com