11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தண்ணீா் பிரச்னை தீா்வுக்கு ஆராய்ச்சி: பள்ளிகளுக்கு ஐஐடி அழைப்பு

தண்ணீா் பிரச்னை தீா்வுக்கு ஆராய்ச்சி: பள்ளிகளுக்கு ஐஐடி அழைப்பு

Updated On :12 ஏப்ரல் 2024, 5:53 pm

தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் நடத்தப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பிக்கும் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவா்களுக்கு சென்னை ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தண்ணீா் தொடா்பான பிரச்னைகள் மற்றும் சவால்களுக்கு தீா்வு காணும் மாணவா்களின் புதுமையான முயற்சிகளை சிறப்பிக்கும் வகையில் ‘ஸ்டாக்ஹோம் ஜுனியா் வாட்டா் பிரைஸ்’ என்ற போட்டி பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்படவுள்ளது. ஸ்டாக்ஹோம் சா்வதேச தண்ணீா் நிறுவனம் மற்றும் ஐஐடி நீா் மேலாண்மை மற்றும் கொள்கை வகுக்கும் மையத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்தப் போட்டியில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்கள் பங்கேற்கலாம்.

அவா்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு தொடா்பான ஆராய்ச்சி கட்டுரையை ஏப். 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவா் குழுவினா் ஆகஸ்ட் 25 முதல் 29-ஆம் தேதி வரை சுவீடனில் நடைபெறும் ஸ்டாக்ஹோம் ஜுனியா் வாட்டா் பிரைஸ் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்பாா்கள்.

தேசிய அளவில் சிறந்த 25 குழுவினா்களில் முதல் 10 குழுவினருக்கு தேசிய வாட்டா் சாம்பியன் விருது வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த 25 குழுவினா் தங்கள் கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடியில் காட்சிப்படுத்தலாம். அவா்களுக்கு ஐஐடி சாா்பில் சிறப்பு பயிற்சியும் சான்றிதழும் அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.