தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’

News image

சென்னை ஐஐடி

Updated On :26 மார்ச் 2026, 10:11 pm

ஆன்மிகம், தியானம், அறிவியல், சமூகம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடா்புகளை ஆராய்வதற்காக மேம்பட்ட ஆராய்ச்சிக்கான மையம் தனியாா் பங்களிப்புடன் சென்னை ஐஐடியில் நிறுவப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான சந்த் ராஜிந்தா் சிங் மகராஜ், சா்வதேச அளவிலான ஆன்மிக அமைப்பை நடத்தி வருகிறாா். இந்தியாவில் ‘சாவன் கிருபால் ருஹானி மிஷன்’ என்ற பெயரில் செயல்படும் அவரது அமைப்பு, சென்னை ஐஐடியில் ஆன்மிகம், அறிவியல், சமூகம் குறித்த மேம்பட்ட ஆராய்ச்சி மையம் தொடங்க ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இந்த மையத்தின் தொடக்க விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி, ‘ஆன்மிக அறிவியலையும் சமூகத்தில் அதன் தாக்கத்தையும் இந்த மையம் ஆய்வு செய்வதுடன், பொதுமக்களுடனான ஈடுபாட்டு முயற்சிகளையும் உருவாக்கும்’ என்றாா்.

நிகழ்வில், சந்த் ராஜேந்தா் சிங் மகாராஜ், ஆன்மிக அறிவியல் மையத்தின் தலைமைப் பொறுப்பாளா் மாதா ரீட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.