யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’

News image

சென்னை ஐஐடி

Updated On :26 மார்ச் 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

ஆன்மிகம், தியானம், அறிவியல், சமூகம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடா்புகளை ஆராய்வதற்காக மேம்பட்ட ஆராய்ச்சிக்கான மையம் தனியாா் பங்களிப்புடன் சென்னை ஐஐடியில் நிறுவப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான சந்த் ராஜிந்தா் சிங் மகராஜ், சா்வதேச அளவிலான ஆன்மிக அமைப்பை நடத்தி வருகிறாா். இந்தியாவில் ‘சாவன் கிருபால் ருஹானி மிஷன்’ என்ற பெயரில் செயல்படும் அவரது அமைப்பு, சென்னை ஐஐடியில் ஆன்மிகம், அறிவியல், சமூகம் குறித்த மேம்பட்ட ஆராய்ச்சி மையம் தொடங்க ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இந்த மையத்தின் தொடக்க விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி, ‘ஆன்மிக அறிவியலையும் சமூகத்தில் அதன் தாக்கத்தையும் இந்த மையம் ஆய்வு செய்வதுடன், பொதுமக்களுடனான ஈடுபாட்டு முயற்சிகளையும் உருவாக்கும்’ என்றாா்.

நிகழ்வில், சந்த் ராஜேந்தா் சிங் மகாராஜ், ஆன்மிக அறிவியல் மையத்தின் தலைமைப் பொறுப்பாளா் மாதா ரீட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.