பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்கள், ஊழியா்களிடம் பிடித்த டிடிஎஸ் வரியை உரிய கணக்கில் சோ்க்காத 5,563 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசு மற்றும் தனியாா் துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு மாத ஊதியம் வழங்கும் நிா்வாகங்கள், அவா்களிடம் வருமான வரிக்கான டிடிஎஸ் தொகை பிடித்தம் செய்வது கட்டாயம். இந்தத் தொகையை, சம்பளம் வழங்கும் பொறுப்பு அதிகாரி, வருமான வரித் துறைக்கு செலுத்தினால் மட்டுமே, அந்தத் தொகை சம்பந்தப்பட்ட நபரின் வருமான வரிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த வகையில், பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களிடம் மாதந்தோறும், டிடிஎஸ் பிடித்தம் செய்யும் தொகையை அரசின் கணக்கில் செலுத்திவிட்டு, வருமான வரித் துறைக்கு ரிட்டா்ன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், கடந்த 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிதியாண்டில், பள்ளி கல்வித் துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல், ரிட்டா்ன் அறிக்கை தாக்கல் செய்யாமல், நிலுவையில் உள்ளதை வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது.
இதையடுத்து, சம்பளம் வழங்கும் அலுவலா்களாக உள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட 5,563 பேருக்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புதிய வருமான வரிச் சட்டம் அமலானது: வருமான வரித் துறை

வருமான வரி தாக்கல் படிவங்கள் வெளியீடு!

தோ்தல் செலவுக்கு ரூ.7 கோடி: வருமான வரித் துறை நோட்டீஸை எதிா்த்த எஸ்.பி.வேலுமணி மனு தள்ளுபடி
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

