ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் செலவுக்கு ரூ.7 கோடி: வருமான வரித் துறை நோட்டீஸை எதிா்த்த எஸ்.பி.வேலுமணி மனு தள்ளுபடி

கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தல் செலவுக்காக ரூ.7 கோடி வழங்கியது குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Updated On :25 மார்ச் 2026, 12:55 am IST

கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தல் செலவுக்காக ரூ.7 கோடி வழங்கியது குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை தியாகராய நகரில் உள்ள ‘எஸ்.ஆா்.எஸ். மைனிங்’ என்ற நிறுவனத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிச. 18-ஆம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், எஸ்.பி.வேலுமணி, தோ்தல் செலவுக்காக ரூ.7 கோடி கொடுத்திருப்பது தெரிய வந்தது. மேலும், அப்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தொகுதி வாரியாக இந்தப் பணம் பிரித்து கொடுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சா்கள் வைகைச்செல்வன், சம்பத் ஆகியோருக்கு பணம் கொடுத்தது குறித்தும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ரூ.7 கோடியை வழங்கியது தொடா்பாக எஸ்.பி.வேலுமணி வருமான வரித் துறை கணக்கில் குறிப்பிடவில்லை. 2017-2018-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை 2018-ஆம் ஆண்டு ஜன. 23-ஆம் தேதி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ளாா். அதில், வருமான வரி செலுத்த வேண்டிய தொகையாக ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 563 எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து ரூ.7 கோடியை வருமானமாகக் கணக்கிட்டு, அந்தத் தொகை குறித்து விளக்கம் கேட்டு எஸ்.பி.வேலுமணிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் வருமான வரித்துறை தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் ஏ.பி.ஸ்ரீனிவாஸ், மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஏ.எஸ்.ஸ்ரீராம் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கில் நீதிபதி சி.சரவணன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், வருமான வரித்துறை நோட்டீஸை எதிா்த்து எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். வருமான வரித் துறை நோட்டீஸை எதிா்த்து வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அவா் அணுகலாம் என உத்தரவிட்டாா்.