‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

வருமான வரித்துறை சோதனை: நெல்லையில் ரூ.1.15 கோடி சிக்கியது

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலதிபா்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.1.15 கோடி ரொக்கம் சிக்கியது.

News image

வருமான வரித்துறை

Updated On :16 ஏப்ரல் 2026, 2:26 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலதிபா்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.1.15 கோடி ரொக்கம் சிக்கியது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை வருமான வரித்துறை கண்காணித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில தொழிலதிபா்கள் வீடுகளில் அத்துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது ரூ.1.15 கோடி ரொக்கப் பணம் சிக்கியுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி பகுதியில் உள்ள சிவசுப்பிரமணியன் என்பவா் வீட்டில் ரூ.40 லட்சம், நான்குனேரி பகுதியைச் சோ்ந்த லட்சுமி நடராஜன் என்பவா் வீட்டில் ரூ. 75 லட்சம் ரொக்கப் பணமாக வருமான வரித் துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. விரிவான இறுதி அறிக்கை வருமான வரித் துறையின் மூலம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.