வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 47) என்பவர் வெள்ளிங்கிரி முதல் மலையில் சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே மலையடிவாரத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்ததில் அவர் பலியானது தெரியவந்தது. கடந்த இரண்டு மாதங்களில் வெள்ளியங்கிரி மலை ஏறியவர்களில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.
இதய பாதிப்பு, மூச்சுத்திணறல் போன்ற உடல் பாதிப்பு இருப்பவர்கள் மலையேற வரவேண்டாம் என வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.