வெள்ளியங்கிரியில் மலை ஏறிய இளைஞர் மயங்கிவிழுந்து பலி!
கோவையில் வெள்ளியங்கிரி மலை எறிய இளைஞர் மயங்கிவிழுந்து பலியான சம்பவம் குறித்து...

வெள்ளியங்கிரியில் மலை ஏறிய இளைஞர் மயங்கிவிழுந்து பலி
கோப்புப்படம்

வெள்ளியங்கிரியில் மலை ஏறிய இளைஞர் மயங்கிவிழுந்து பலி
கோப்புப்படம்
கோவையில் வெள்ளியங்கிரி மலை எறிய தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மயங்கிவிழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கைலாயம் எனப் பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு ஏழு மலையலைக் கடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்காக வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் குமார் (23) வெள்ளிக்கிழமை வெள்ளியங்கிரிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து சிவன் கோயிலுக்கு செல்வதற்காக 5 ஆவது மலையில் ஏறியுள்ளார். அப்போது திடீரென மயங்கிவிழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள், கடும் சிரமத்திற்கு இடையே முகேஷ் குமாரை அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து முகேஷ் குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக. தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...