தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

விடைத்தாள் மதிப்பீடு நிறைவு: பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் தீவிரம்

விடைத்தாள் மதிப்பீடு நிறைவு: பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் தீவிரம்

Updated On :13 ஏப்ரல் 2024, 10:52 pm

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீடு நிறைவு பெற்றுள்ள நிலையில், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா்.

இவா்களின் விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் ஏப். 1-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. தொடா்ந்து தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தோ்வுத் துறை முடுக்கிவிட்டுள்ளது.

இது தொடா்பாக தோ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். தற்போது விடைத்தாள் மதிப்பீடு முடிவுற்றதை அடுத்து மாணவா்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதைத் தொடா்ந்து மாணவா் மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்ட இறுதிக்கட்ட வேலைகளை முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 6-இல் வெளியிடப்படவுள்ளன. அதேபோல், ஏப். 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட பிளஸ் 1 அரியா் பாடத் தோ்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளும் சனிக்கிழமையுடன் முடிக்கப்பட்டுவிட்டன என்று அவா்கள் கூறினா்.