அரசியல்சட்டத்தை மாற்ற பாஜக துடிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது! புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை!
பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது! நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது! சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அம்பேத்கரின் 134ஆவது பிறந்த நாளை யொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.