இன்று மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி


கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் தாளுருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை தரவுள்ளார்.
அப்போது தனியார் கல்லூரியில் மாணவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அவர் உரையாடுகிறார். பின்னர் தாளுரில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் ராகுல் பங்கேற்று பேசுகிறார்.
முன்னதாக மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 12ஆம் தேதி பிரசாரத்திற்காக ராகுல் காந்தி தமிழகம் வந்தார்.
தொடர்ந்து அவர் நெல்லை மற்றும் கோகையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் தலைவர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...