திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவில் உண்மையை மறைத்து வேட்புமனுவை தாக்கல் செய்ததாக மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.
நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது, இவ்வழக்கு தாமதமாக தொடுக்கப்பட்டுள்ளது, தேர்தல் நிறைவடைந்த பின்னர் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம்" என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.