சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் வேட்பாளர் பங்கேற்கவோ கூடாது.
சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகு

தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பிறகு சமூகவலைதளங்கள் மூலம் வாக்கு சேகரிப்போருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை (ஏப். 17) மலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்த நிலையில் நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நாள் வரை உள்ள தேர்தல் விதிமுறைகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.

இந்த விதிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. ஊடகங்கள், முகநூர், வாட்ஸ் ஆப், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரசாரம் செய்யக் கூடாது.

நாளை மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிந்தவுடன் தொகுதி சாராத வெளியூர் நபர்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

விடுதிகள், வீடுகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் வேட்பாளர் பங்கேற்கவோ கூடாது.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், ஏப். 17 அன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

இசை மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகள், திரையரங்குகள் வாயிலாக பிரசாரம் செய்யக்கூடாது.

இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Attachment
PDF
தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு அமலாகும் கட்டுப்பாடுகள்.pdf
Preview

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com