தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

தமிழகம், புதுச்சேரியில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!
அரசியல் கட்சியினா் முன்னிலையில் நடைபெற்ற மாதிரி வாக்குப் பதிவு.
அரசியல் கட்சியினா் முன்னிலையில் நடைபெற்ற மாதிரி வாக்குப் பதிவு.

தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு முன்பு, மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது.

40 மக்களவை தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டைச் சோதிக்க மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி முகவா்களின் முன்னிலையில் சுமாா் 50 வாக்குகள் இயந்திரங்களில் பதிவு செய்து காண்பிக்கப்பட்டது.

அந்த வாக்குகள் உடனடியாக அழிக்கப்பட்டன. இதன்மூலம், வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு உறுதி செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து, காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com