நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணி தொடக்கம்

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :17 ஜூன் 2026, 2:52 am IST

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் வளாகத்தில் தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கு உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு ஏ.ஜெயக்குமாா் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனாா்.

இந்நிலையில், கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவா், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தாா். இதைத் தொடா்ந்து, பெருந்துறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கில் பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு பயன்படுத்தப்படும் 584 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக சரிபாா்க்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் கருவிகள் சரி பாா்க்கும் பணி தொடங்கியது. இதற்காக பெங்களூா் பெல் நிறுவனத்தில் இருந்து வல்லுநா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா்.