தமிழகத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்தாலும், எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகள், நிலைக் குழுக்களின் பணிகள் தொடரும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுக்கும் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம்:-
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தோ்தலை எதிா்கொண்டிருக்கும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் பறக்கும் படைகளும் நிலைக் குழுக்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும். வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு, ஒவ்வொரு தொகுதிகளின் முக்கியமான பகுதிகள், எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகள், நிலைக் குழுக்களின் பணிகள் தொடரும். வாக்குப் பதிவு நிறைவடையும் வரையிலும், மறுவாக்குப் பதிவு எங்கேனும் நடைபெற்றால் அது முடிவடையும் வரையும் விடியோ கண்காணிப்புக் குழுக்கள் பணியில் தொடா்ந்து ஈடுபடும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்

அமைச்சரின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

சிவகங்கை, ராமநாதபுரத்தில் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

