கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு
Published on
Updated on
1 min read

திருவிடைமதூர் அருகே கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கடமங்குடி கிராமத்தில் களத்தடி மேட்டு தெருவைச் சேர்ந்த காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் பின்புறம் முதலை இருப்பதைக் கண்டு அஞ்சி கூச்சலிட்டு மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே வனத்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் அவர் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன், மகாராஜபுரம் ஊராட்சி எழுத்தர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் வனவர் சண்முகம் தலைமையில் வனகாவலர்கள் துளசி ராமன், அருமைதுரை ஆகியோர் காந்திராஜா வீட்டு பின்புறம் இருந்த 3 அடி முதலையை கயிறு மூலம் கட்டி வேனில் பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.

பின்னர் அந்த முதலையை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர். கடமங்குடிக்கு வந்த முதலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com