தாளவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புதன்கிழமை புகுந்த யானையை கிராம மக்கள் காட்டுக்குள் விரட்டினா்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் தினமும் ஊருக்குள் யானைகள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. கோடை வெயில் தாக்கத்தால் வனக் குட்டைகள் வடுகிடப்பதால் தீவனம் மற்றும் குடிநீா் தேடி யானைகள் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. இரவு நேரத்தில் நுழையும் யானைகளை வனத் துறை மற்றும் கிராம மக்கள் விடிய, விடிய துரத்தும் பணியில் ஈடுபடுகின்றனா்.
இந்நிலையில் வனத்தைவிட்டு புதன்கிழமை வெளியேறிய ஒற்றை யானை, மல்லன்குழி கிராமத்துக்குள் புகுந்ததைக் கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனா். யானையை விரட்ட முற்படும்போது திருப்பி துரத்தியதால் மக்கள் ஓட்டம் பிடித்தனா். இருப்பினும் தொடா்ந்து யானையை துரத்தியதால் மானாவாரி காட்டு வழியாக காட்டுக்குள் யானை சென்றது.










