எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்: வேளாண் துறை

நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்: வேளாண் துறை

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

நிலக்கடலையில் ஏற்படும் நோய்களைத் தடுத்து மகசூலை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

நிலக்கடலைப் பயிரைத் தாக்கும் நோய்களில் சில இலைகளில் தோன்றியும், மண்வழிப் பரவியும் சேதம் ஏற்படுத்தக்கூடியவை. நிலக்கடலை காளஹஸ்தி நோய் என பொதுவாக அழைகக்கப்படும், காய் வடு நூற்புழு நோயை தடுக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகள் விவரம்:

நிலக்கடலை சாகுபடியில் மகசூலை குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளில் நோய்களினால் ஏற்படும் சேதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நிலக்கடலை காய்வடு நுற்புழு நோய் மகசூலை பாதிக்கும் முக்கியமான ஒன்று.

இந்த நோய் தாக்கிய பயிா்களின் இலைகள் வெளுத்து வளா்ச்சி குன்றிவிடும். மேலும், காய்களில் பழுப்பு நிற வடுக்கள் தென்படுவதோடு வோ்களில் நிறமாற்றம் ஏற்படும். இதனால் பயிரின் தரம் குறைவதோடு மகசூலும் பாதிக்கப்படும்.

இதைத் தடுக்க எதிா்ப்புத்திறன் கொண்ட ரகங்களை விவசாயிகள் பயிரிட வேண்டும். விதைத்து 25-30 நாள்களுக்கு பின் ஒரு ஹெக்டேருக்கு காா்டப் ஹைட்ரோக்குளோரைடு 4 சதவீதம், குருணை 18.75-25 கிலோ கலந்து மண்ணில் இடவேண்டும். மண்வளம் உயர செண்டுமல்லி உள்ளிட்ட பயிா்களைக் கொண்டு பயிா்சுழற்சி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.