விராலிமலை பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பற்றி எரிந்த தீயால் பரபரப்பு நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-திருச்சி சாலை தனியார் கூடு கட்டும் தொழிற்சாலை அருகே பல ஏக்கரில் தனியார் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் அப்பகுதி தொழிற்சாலை கழிவு பொருட்களை டன் கணக்கில் சேமித்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நள்ளிரவு மூன்று மணி அளவில் திடீரென அந்த குடோனில் இருந்து தீப்பிழம்பு கிளம்பி உள்ளது.
இதனையடுத்து தீ மளமளவென பரவி பழைய பொருட்கள் பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தொழிலாளர்கள் அளித்த தகவலை தொடர்ந்து நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனர்.
பழைய பொருட்கள் என்பதாலும் வெயிலில் காய்ந்து கிடப்பதாலும் தீ கட்டுக்கடங்காமல் ஆங்காங்கே தற்போது வரை எரிகிறது. எனவே, தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டாட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.