வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர் பள்ளத்தில் சிக்கியது.

News image
Updated On :23 ஏப்ரல் 2024, 7:23 am

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 7.05 மணிக்கு வடம் பிடித்து தொடங்கப்பட்டது.

இத்தேர் முற்பகல் 10.30 - 10.45 மணியளவில் சாரங்கபாணி தெற்கு வீதிக்கு வந்தபோது திடீரென இடது புற சக்கரம் ஏறக்குறைய 5 அடி ஆழத்துக்கு திடீரென உள்வாங்கியது.

Story image

இதைத்தொடர்ந்து பள்ளத்தில் மணல், ஜல்லிக் கற்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு தேர் சக்கரத்தை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Story image

அப்பள்ளத்தில், குடிநீர் உந்து சக்தி நிலையத்துக்கான குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அண்மையில் பள்ளம் தோண்டப்பட்டு சீர் செய்யப்பட்டது. அதன் பிறகு பள்ளம் சரியாக மூடப்படாத நிலையில், அதன் மீது வந்த தேர் உள்வாங்கியதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் தேரோட்டம் சுமார் 2 மணிநேரம் தடைப்பட்டுள்ளது.

படவிளக்கம்: கும்பகோணம் சாரங்கபாணி தெற்கு வீதியில் பள்ளத்தில் சிக்கிய தேர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.