கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 7.05 மணிக்கு வடம் பிடித்து தொடங்கப்பட்டது.
இத்தேர் முற்பகல் 10.30 - 10.45 மணியளவில் சாரங்கபாணி தெற்கு வீதிக்கு வந்தபோது திடீரென இடது புற சக்கரம் ஏறக்குறைய 5 அடி ஆழத்துக்கு திடீரென உள்வாங்கியது.

இதைத்தொடர்ந்து பள்ளத்தில் மணல், ஜல்லிக் கற்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு தேர் சக்கரத்தை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்பள்ளத்தில், குடிநீர் உந்து சக்தி நிலையத்துக்கான குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அண்மையில் பள்ளம் தோண்டப்பட்டு சீர் செய்யப்பட்டது. அதன் பிறகு பள்ளம் சரியாக மூடப்படாத நிலையில், அதன் மீது வந்த தேர் உள்வாங்கியதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் தேரோட்டம் சுமார் 2 மணிநேரம் தடைப்பட்டுள்ளது.
படவிளக்கம்: கும்பகோணம் சாரங்கபாணி தெற்கு வீதியில் பள்ளத்தில் சிக்கிய தேர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகாசியில் தேரோட்டத்தின் போது பள்ளத்தில் சிக்கிய தோ்ச் சக்கரம்

திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் பங்குனி உத்திரம்! தேர் இழுத்த பக்தர்கள்!
பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து

பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டம்: பொதுப்பணித்துறை அறிக்கைக்கு காத்திருக்கும் பக்தர்கள்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


