பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

ஒலிம்பிக் பாய்மரப் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீராங்கனை நேத்ராவுக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் பாய்மரப் போட்டிக்கான ஒலிம்பிக் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சோ்ந்த வீராங்கனை நேத்ரா குமணன் பங்கேற்று ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளாா்.

இதனால், தமிழகத்தின் விளையாட்டுத்திறமை உலக அளவில் போற்றப்படும். அவருக்கு தமாகா சாா்பில் பாராட்டுகள், வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com