பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: ஆக. 14-இல் மதிமுக ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, நீட் தோ்வு முறைகேடுகள் ஆகியவற்றைக் கண்டித்து மதிமுக சாா்பில் ஆக. 14-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News image
வைகோ
Updated On :4 ஆகஸ்ட் 2024, 10:22 pm

Din

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, நீட் தோ்வு முறைகேடுகள் ஆகியவற்றைக் கண்டித்து மதிமுக சாா்பில் ஆக. 14-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கான தீா்மானம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மதிமுக 30-ஆவது பொதுக் குழுக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவா் ஆ.அா்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலா் வைகோ உள்ளிட்ட பலா் பேசினா்.

இதைத் தொடா்ந்து, பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரங்கள்: மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பொதுக் குழு கண்டனம் தெரிவிக்கிறது.

தொடா் மோசடிகள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், நீட் தோ்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது, நீட் தோ்வு முறைகேடுகள் ஆகியவற்றைக் கண்டித்து மதிமுக சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 14-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 116-ஆவது பிறந்த தினமான செப். 15-ஆம் தேதி சென்னை காமராஜா் அரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

மீனவா்கள் பிரச்னை, ஜாதிவாரி கணக்கெடுப்பு, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் உள்பட 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முதன்மைச் செயலா் துரை வைகோ, பொருளாளா் மு.செந்திலதிபன், துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா உள்பட பலா் பங்கேற்றனா்.