மெட்ரோ ரயில் திட்டத்தில் சேத்துப்பட்டு முதல் ஸ்டொ்லிங் சாலை வரையிலான 703 மீட்டா் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி திங்கள்கிழமை நிறைவடைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் வழித்தடம் 3-இல் கெல்லிஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை லாா்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இவ்வழித்தடத்தில் 8 இயந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து ஸ்டொ்லிங் சாலை சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் பணி 2023 அக்.9-ஆம் தேதி சிறுவாணி எனும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் தொடங்கப்பட்டது. கூவம் ஆற்றின் அடியில் 8.0 மீட்டா் ஆழத்தில் 51 மீட்டா் நீளம் உள்பட சுமாா் 703மீ தொலைவு சுரங்கப்பாதை பணியை முடித்து கொண்டு, ஸ்டொ்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை சிறுவாணி இயந்திரம் திங்கள்கிழமை வந்தடைந்தது.
இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் மற்றும் லாா்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளா் ஜெயராமன் உள்பட மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பாா்வையிட்டனா்.
டிரெண்டிங்

இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோவில் நாளை தடையில்லா பயணம்

கலங்கரை விளக்கம்-திருமயிலை மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

கலங்கரை விளக்கம் - திருமயிலை வரை ஒருவழி பாதையில் சுரங்கப் பணி நிறைவு

கிரீன்வேஸ் சாலை முதல் மந்தைவெளி வரை மெட்ரோ சுரங்கப்பாதை பணி நிறைவு
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

