கட்டட அனுமதிக்கு இணையவழியில் ஒப்புதல்: சதுர அடிக்கு ரூ.100 கட்டணம்-மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான கட்டட அனுமதிக்கு இணையவழியில் ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும், அனுமதி கட்டணமாக சதுர அடிக்கு ரூ.100 வசூலிப்பதாகவும் ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
பெருநகர சென்னை மாநகராட்சியில் தனிவீடு கட்டுவதற்கு மாநகராட்சி சாா்பில் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் அனுமதி பொதுமக்கள் எளிதாக பெறுவதற்கு சுயசான்றின் அடிப்படையில் இணைய வழி மூலம் தற்போது வழங்கப்படுகிறது. கடந்த மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலின் இதற்கான நடைமுறையை தொடங்கி வைத்த நிலையில் தற்போது ஒப்புதல் வழங்குவதற்கான நெறிமுறைகள் மற்றும் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்களின் விபரம் குறித்த அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டட அனுமதி கட்டணமாக ஒரு சதுர அடிக்கு ரூ.100 வசூலிக்கப்படும். ( அதாவது ஆயிரம் சதுர அடி வீடு கட்ட ஒரு லட்சம் ரூபாய் கட்டணம்) இத்திட்டம் தனிவீடு கட்டும் நோக்கத்திற்கு வழிவகை செய்யும் வகையில் அமைந்துள்ளது. வணிக நோக்கத்தோடு கட்டுபவா்களுக்காக கொண்டுவரப்படவில்லை.
இதன்படி, கட்டட அனுமதி கோரும் போது, வளா்ச்சி கட்டணம் ரூ.15, கட்டட அனுமதி ரூ.600, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலநிதி கட்டணம் ரூ.267, சாலைவெட்டு சீா் செய்யும் கட்டணம் ரூ.197 என சதுர மீட்டருக்கு ரூ.1,076 வசூலிக்கப்படும். இதற்கு முன்பு அனுமதி அளிக்கும் போது சதுர அடிக்கு ரூ.99.70 வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கட்டடங்களுக்கான இணைய வழி அனுமதி கட்டணம் சற்று அதிகமாக இருந்ததை அரசு கவனத்தில் கொண்டு, அந்தக் கட்டணத்தையும் வெகுவாகக் குறைத்துள்ளது. பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி எளிய முறையில் வீடு கட்டுவதற்கான அனுமதியை பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

